திருச்சி: துறையூர் பச்சமலை புத்தூரைச் சேர்ந்தவர் நிஷா (21). இவரது கணவர் கார்த்திக் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனையடுத்து கிணத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் நிஷா தனது ஒன்றரை வயது குழந்தையுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 25)கணவர் மறைந்த நினைவு தினத்தையொட்டி சோகமாக இருந்த நிஷா, பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் மகனை கொன்று விட்டு, தனது இடது கை மணிக்கட்டு பகுதியை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
![mother kills child and suicide attempt குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கொலை கொலை வழக்கு தற்கொலை திருச்சி செய்திகள் திருச்சி துறையூரில் குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் குழந்தையை கொன்ற தாய் குற்றச் செய்திகள் trichy news trichy latest news trichy child murdered by his mother child murder child murder by mother trichy child murder by mother mother killed her child and commit suicide in trichy](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12573267_suicide.jpg)
வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பிய போது, நிஷா மயக்க நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக துறையூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக துறையூர் போலீசார்,நிஷா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.